புதுச்சேரிக் கடற்கரை புகழ்பெற்றது.பாரதியார்,பாரதிதாசன்,வாணிதாசன் உள்ளிட்ட பாவலர்கள் வழியாக என்றும் உலக மக்களின் உள்ளங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் புதுச்சேரிக் கடற்கரைக்கு இன்று மாலை என் தந்தையார்,அக்கா கானல்வரியுடன் சென்று மகிழ்ந்தேன்.கடல் அலைகளின் அழகு,படகுகளின் அணிவகுப்பு,மக்கள் கடற்காற்று வாங்கும் நோக்கில் அமைதியாகவும்,உடற்பயிற்சி செய்வோர் பரபரப்பாகவும் இயங்கும் இயக்கம் கண்டு மகிழ்ந்தேன்.
சிறுநீரக நோய் உள்ளதால் எந்தப்பண்டமும் வாங்கி உண்ணவில்லை.ஒரு மணிநேர காற்று வாங்கலுக்குப் பிறகு பாரதிப் பூங்கா சென்று என்னையொத்த சிறுவர்களுடன் ஆடி மகிழ்ந்தேன்.உரோமன் உரோலந்து நூலகத்தில் நோட்டமிட்டோம்.பாவலர் சீனு தமிழ்நெஞ்சனைக் கண்டு வணக்கம் சொன்னோம். இரவு வீடு வந்துசேர்ந்தேன்.
புதுச்சேரி வருபவர்கள் கடற்காற்றும்,பாரதிப்பூங்காவும் பார்க்க என்னைப் போன்ற சிறுவர்களுடன் வாருங்கள்.வருகை மகிழ்ச்சியாக இருக்கும்.